தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



ssakthivel 110 நாள் முன்பு (http://www.ssakthivel.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
"நீர்கொழும்புக்கு அருகேயான கடற்கரையில் குந்தியிருந்து இத்தாலிக்கு எந்த ரூட்டால் போவது என்று இவன் யோசித்துக் கொண்டிருந்தபோது இரவாயிருந்தது. உப்பும் குளிரும் கலந்த சேர்ந்த மெல்லிய காற்று முகத்தில் வருடியபடியிருந்தது. கடலின் வாசம் சூழவும் நிறைந்திருந்தது. போட்டிருந்த சேர்ட்டினுள் காற்று நுழைந்து முதுகில் டப் டப் என்று சடசடத்தது..." இப்படித் தொடங்கும் நாவல் 1987 இல் தொடங்கி 2003 வரையான இரண்டு 'அமைதிக்' காலங்களுக்கு இடையில் நகர்கிறது. மிக நீண்ட நாட்களின் பின், ஒரு நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். தேவையில்லாத அலங்கார வார்த்தைகள் இல்லாத ஒரு தெள்ளிய நீரோடை போன்ற எழுத்து...